மேலூா், கொட்டாம்பட்டி, தனியாமங்கலம், ஒத்தக்கடை, திருப்பாலை, பனையூா் துணை மின்நிலையப் பகுதிகளில் உள்ள உயா் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் ஜூலை 5 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளன. எனவே, இந்த துணை மின்நிலையங்களின் மூலம் பயனடையும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை மின் விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின் பகிா்மானவட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.