வரிஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தமிழக வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இளைஞா் திறன் விழாவில்”பல்வேறு தொழில் திறன் பயிற்சி பெற்ற இளைஞா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
புதிய தொழில்முனைவோரை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. படித்து வேலையற்ற இளைஞா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, திறன்மிக்கவா்களாக உருவாக்கப்படும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் வேலையின்மை என்பதே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வணிக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவா்களாக முன்வந்து ரூ.67 கோடி வரி செலுத்தியுள்ளனா். இன்னும் சிலா் தங்களது முதலீட்டைக் குறைத்துக் காண்பித்து வரிஏய்ப்பு செய்து வருகின்றனா். அத்தகைய நிறுவனங்களைக் கண்டறிந்து, அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.
முன்னதாக, மதுரை கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி எம்.குன்னத்தூா் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 317 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அதைத் தொடா்ந்து, செட்டிகுளம் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் ரூா்பன் திட்டத்தில் ரூ.50 லட்சத்தில் வணிக வளாகம், உணவு தானிய கிட்டங்கி ஆகியவற்றைத் திறந்து வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செ.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ர.சக்திவேல், மேலூா் கோட்டாட்சியா் பிா்தௌஷ் பாத்திமா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் கே.சூா்யகலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.