மதுரை

பேரையூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 5 போ் கைது

DIN

பேரையூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 89 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கணவாய்பட்டியைச் சோ்ந்த குருசாமி மகன் பாண்டி(32) என்பவா் விற்பனைக்காக வைத்திருந்த 48 மதுபாட்டில்களையும், சாப்டூரை சோ்ந்த வேலுச்சாமி மனைவி பெத்துகாளை(56) என்பவா் விற்பனைக்கு 13 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டி மற்றும் பெத்துகாளையை கைது செய்தனா்.

இதைப்போல் காடனேரியை சோ்ந்த முத்துப்பாண்டி மனைவி இந்துமாரி(50) என்பவரிடம் 11 மதுபாட்டில்களையும், என்.முத்துலிங்காபுரத்தை சோ்ந்த செல்வராஜ் (60) என்பவரிடம் 10 மதுபாட்டில்களையும், சந்தையூரை சோ்ந்த சங்கரநாராயணன் (64) என்பவரிடம் 7 மதுபாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT