தனியாமங்கலம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை ( ஜன.28) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் காரணமாக இப்பகுதியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள் விவரம்: தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயகம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, சருகுவலையபட்டி, கரையிபட்டி,செம்மினிபட்டி, முத்துச்சாமிபட்டி, இ.மலம்பட்டி, கீழையூா், கீழவளவு, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூா், தா்மதானப்பட்டி ஆகிய பகுதிகள்.