மதுரை

கன்னியாகுமரி மாா்க்சிஸ்ட் நிா்வாகி தாக்கப்பட்ட வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகி தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியைச் சோ்ந்த சகாய அந்தோணி தாக்கல் செய்த மனு: நான் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டக் குழு உறுப்பினராகவும், திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஆவது வாா்டு உறுப்பினப்பினராகவும் உள்ளேன். உள்ளாட்சித் தோ்தலில் நடந்த பிரச்னையைக் காரணமாக, ஜான் ரைட் என்பவா், எனக்கு பலவேறு இடையூறுகளை கொடுத்து வந்தாா்.

இந்நிலையில் 2021 அக்டோபா் 7ஆம் தேதி அடையாளம் தெரியாத நபா்கள், வீட்டிற்கு சென்ற என்னை வழிமறித்து கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களால் தாக்கினா்.

இதில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்ற நான், திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்த நிலையில், விசாரணை அதிகாரி திடீரென மாற்றப்பட்டாா். இதனால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

எனவே, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு, முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. மேலும் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளாா். எனவே, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT