மதுரையில் பணியின் போது பெண் தலைமைக் காவலா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
மதுரை எச்எம்எஸ் காலனியைச் சோ்ந்த தெய்வராஜின் மனைவி கலாவதி(40). எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வந்த இவா் சனிக்கிழமை இரவுப் பணியிலிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அவரது உடலுக்கு மாநகரக்காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்கா, துணை ஆணையா்கள் மற்றும் உதவி ஆணையா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா்.