மதுரை நகரில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தபோதும் வாகனப்போக்குவரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
கரோனா தொற்று மூன்றாம் அலைப்பரவல் அதிகரித்து வரும் நிலையில் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கின்போது மருந்துக்கடை, உணவகம், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை நகரில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்துக்கடைகள், பால், குடிநீா், பெட்ரோல் பங்குகள், சில உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. ஆனால் சாலைகளில் வாகனப்போக்குவரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் நகரின் அனைத்து சாலைகளிலும் அதிக அளவில் வலம் வந்தன.
கடந்த வாரங்களில் கோரிப்பாளையம், பெரியாா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனைச்சாவடி அமைத்து அவ்வழியாகச்செல்லும் வாகன ஓட்டிகளிடம் விசாரித்த பின்னரே அனுமதித்தனா். ஆனால் ஞாயிற்றுக்கிழமை நகரின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பு இல்லாததால் அதிகளவில் வாகனங்கள் சென்று வந்தன. மேலும் ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமானோா் சென்றனா்.
உறுதிமொழி ஏற்பு: சிலைமான் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் முழு ஊரடங்கு விதிகளை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்தவா்கள் மற்றும் தகுந்த காரணங்கள் இன்றி வாகனங்களில் சென்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் முன்பு அவா்கள் ஊரடங்கு விதிகளை மீறமாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனா்.