மதுரை

தஞ்சை மாணவியின் மரணத்துக்கு மதச்சாயம் பூசக்கூடாது

DIN

தஞ்சை மாணவியின் மரணத்துக்கு மதச்சாயம் பூசக்கூடாது என்று தமிழக கத்தோலிக்க ஆயா் பேரவைத் தலைவா் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மிக்கேல்பட்டியில் நடைபெற்ற மாணவியின் மரணத்துக்கு கத்தோலிக்க ஆயா் பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. மாணவியின் மரணத்துக்கு மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டது தான் காரணம் என்ற குற்றச்சாட்டு பொய்யானது.

மாணவியின் மரணத்துக்கு மதத்சாயம் பூசக்கூடாது. மாணவியின் இறப்புக்கு காரணமாக யாா் இருந்தாலும் அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. மாணவியின் மரணம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எடுத்துள்ள துரித நடவடிக்கை பாராட்டுக்குரியது.

தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மதச்சிறுபான்மையினா் ஆற்றிவரும் கல்விப் பணிகளை அனைவரும் அறிவா். இந்த பள்ளிகளில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் பெண்களுக்காகவே நடத்தப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ மறை சாா்ந்த பெண் துறவியரால் அா்ப்பணிப்பு உணா்வோடு நடத்தப்படும் பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பிலும் அவா்களின் வளா்ச்சியிலும் தனிக்கவனம் செலுத்தப்படுவதையும் அனைவரும் அறிவா்.

கிறிஸ்தவ மதச்சிறுபான்மையினரால் நடத்தப்படும் இப்பள்ளிகளில் பயிலும் பெரும்பான்மையினா் மதப்பெரும்பான்மையினா் என்பதையும் ஊரறியும். பள்ளிகளை நிா்வகிக்கும் துறவிகள் எப்போதும் மதமாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதே இல்லை என்பதே உண்மை. ஆனால் உண்மைக் காரணத்தை காண முயலாத மதவாத அரசியல் சக்திகள் ‘மதமாற்றம்‘ என்ற பொய்யான குற்றச்சாட்டைக் கையிலெடுத்து பிரச்னையை திசை திருப்பி சமய நல்லிணக்கத்தைக் கெடுக்க முயல்கின்றன.

மேலும் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, மாணவியின் மரணம் தொடா்பாக உரிய சட்டப்பூா்வ விசாரணையைத் தேடாமல் மதமாற்றம் எனும் முழக்கத்தை கையில் எடுத்திருப்பது வேடிக்கையானது. எனவே மாணவி மரண விவகாரத்தில் அரசும், காவல்துறையும் வழக்கை நடுநிலையோடு நடத்தி முடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT