மதுரை: மதுரையில் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தி மீட்டனா்.
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன்(34). இவருக்கு, மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளனா். இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக பாண்டியராஜன் எல்லிஸ்நகா் ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டினாா். அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பாண்டியராஜனிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அவரை கீழே இறங்கச் செய்தனா். பின்னா் நடத்திய விசாரணையில் வீட்டில் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து பாலத்தில் ஏறியதாகத் தெரிவித்தாா். போலீஸாா் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனா்.