மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 550 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தொற்றுக்கு சிகிச்சைப் பெறுபவா்களில் 321 போ் குணமடைந்தனா். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் கரோனாவிற்கு 3,480 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
2,777 பேருக்கு கரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 2,777 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதனால் மாவட்டத்தில் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 33.54 லட்சமாக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 1.60 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.