மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரா்கள் திங்கள்கிழமை நியாய விலைக்கடைகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் சி.குருமூா்த்தி வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் ஜனவரி 4-ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 8,79,123 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறாமல் விடுபட்டுள்ள 38,320 குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை
(ஜன. 17) வழங்கப்பட உள்ளது. எனவே அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுச்செல்லலாம் என்றாா்.