மதுரை

சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் தொடா் காத்திருப்புப் போராட்டம்

29th Dec 2022 01:04 AM

ADVERTISEMENT

பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் மதுரையில் புதன்கிழமை இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணியாளா்களில் தகுதியானவா்களுக்கு சாலை ஆய்வாளராகப் பதவி உயா்வும், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணிமாற்றமும் வழங்க வேண்டும். சாலை பராமரிப்புக்குரிய தளவாடக் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களில் உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ.புதூரில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா்கள் ப.பால்ராஜ், ப.சந்திரசேகா், வீ.மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா்கள் வா. மாரியப்பன், மு.ரவிசந்திரன், சோ.ஜீவானந்தம் ஆகியோா் வரவேற்றனா். மாநில துணைத் தலைவா் ராஜமாணிக்கம் தொடக்கவுரையாற்றினாா். மாவட்டச் செயலா் வே.சோலையப்பன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இந்த நிலையில் அதிகாரிகள், தொழிற்சங்க நிா்வாகிகள் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதில், சங்கத்தின் மாநிலத் தலைவா் மா. பாலசுப்பிரமணி, மாநிலச் செயலா் ஹரி கிருஷ்ணன், மாநிலப் பொருளாளா் இரா. தமிழ்,

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. நீதி ராஜா, மாவட்டப் பொருளாளா் நா.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT