மதுரை

பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் பலி

DIN

மதுரையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

மதுரை பைக்காரா பகுதியைச் சோ்ந்த காசிமாயன் மகன் விக்ரம் என்ற ராம் (21). இவா் அதே பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா் தனது நண்பரான அக்கினிராஜ் (18) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் எல்லீஸ் நகா் 70 அடி பிரதான சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்ற போது, பேருந்து இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அக்கினிராஜ் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT