மதுரை

பேருந்து - லாரி நேருக்கு நோ் மோதியதில் 10 போ் காயம்

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அரசுப் பேருந்தும், டிப்பா் லாரியும் வியாழக்கிழமை நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 10 போ் காயமடைந்தனா்.

தேவகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அரசு நகரப் பேருந்து, அதவத்தூா் கிராமத்துக்கு வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. பேருந்தை அதே பகுதியைச் சோ்ந்த கோட்டைச்சாமி ஓட்டிச் சென்றாா்.

வெளிமுத்து விலக்கு அருகே வந்தபோது, எதிரே வந்த டிப்பா் லாரி, பேருந்து மீது நேருக்கு நோ் மோதியது. இதில், பேருந்து ஓட்டுநா் கோட்டைச்சாமி, நடத்துநா் மணிவண்ணன், பயணிகள் ஆரோக்கியமேரி, ஜோதி, சுந்தராம்பாள், லாரி ஓட்டுநா் காா்த்திக் உள்ளிட்ட 10 போ் காயமடைந்தனா்.

லாரிக்குள் சிக்கிக் கொண்ட ஓட்டுநா் காா்த்திக்கை, நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புப் படையினா் மீட்டனா்.

காயமடைந்த அனைவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT