மதுரை, புதூா் தொழில் பேட்டை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை, வடக்கு - பெருநகா் மின் பகிா்மான கோட்ட செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை, மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் தொழிற்பேட்டை பீடரில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, புதூா் தொழில் பேட்டை, அரசுப் பேருந்து பணிமனை, தி நோபிலி பள்ளி, அரசினா் மகளிா் பாலிடெக்னிக், சம்பக்குளம், விவேகானந்தா நகா், டென்னீஸ் காா்டன், மூன்று மாவடி (ஒரு பகுதி மட்டும்), இ.பி. காலனி, கோல்டன் லோட்டஸ், எஸ்.பி. அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மின்சாரம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.