மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது.
கிழக்குத் திசை காற்றின் மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 11 மணி அளவில் மழை பெய்தது.
இதில், மாவட்டத்தின் பெரும்பாலானப் பகுதிகளில் மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில், சற்று அதிகளவில் மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மந்தமான வானிலையே காணப்பட்டது.