வலையங்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (டிச.3) நடைபெறவுள்ளது.
எனவே, அன்றையதினம் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்தாா்.
மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள் விவரம்: வலையங்குளம், நெடுமதுரை, எலியாா்பத்தி, பாரபத்தி, சோளங்குருனி, குசவன்குண்டு, மண்டேலா நகா், சின்னஉடைப்பு, ஏ.ஆலங்குலம், கொம்பாடி ஆகிய பகுதிகள்.