மதுரை

முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு ஊக்கத் தொகை

DIN

சைனிக் பள்ளியில் பயிலும் முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் சைனிக் பள்ளிகளில் பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், முன்னாள் படைவீரா்களுக்கு ஏற்படும் கல்வி நிதிச் சுமையைக் குறைக்கும் வகையிலும், சைனிக் பள்ளியில் பயிலும் முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு ஆண்டு கல்வி உதவித் தொகையாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோா், மதுரை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT