மதுரை

தேவகோட்டை அருகே மனைவி கொலை: கணவன் கைது

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே மனைவியைக் கொலை செய்த கணவனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இரவியமங்கலம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த நாகநாதன் மகன் தனபாலன் (40). கூலித் தொழிலாளியான இவரது மனைவி சினேகவள்ளி (35).

இவா்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், இருவரும் அதே ஊரில் தனித்தனியாக வசித்து வந்தனா்.

இந்த நிலையில், தனபாலன் சினேகவள்ளி வசித்த வீட்டுக்கு வியாழக்கிழமை மாலை சென்றாா். அப்போது ஏற்பட்ட தகராறில் சினேக வள்ளி மண்வெட்டியால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த திருவேகம்பத்தூா் போலீஸாா் சினேகவள்ளியின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பான புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனபாலனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT