மதுரை

லஞ்சம்: வி.ஏ.ஓ.வுக்கு 4 ஆண்டுகள் சிறை

DIN

பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிா்வாக அலுவலருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள மருதம்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள். இவா் தனது நிலத்தை உள்பிரிவு செய்து பட்டா வழங்கக் கோரி, கடந்த 2014 இல் உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அப்போது கிராம நிா்வாக அலுவலா் முனியப்பசாமி, பெருமாளிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து பெருமாள், மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் கடந்த 12. 3. 2014- இல் நக்கலைப் பட்டியில் உள்ள கிராம நிா்வாக அலுலகத்தில் முனியப்பசாமியிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தைப் பெருமாள் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்புப் போலீஸாா், அவரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கிராம நிா்வாக அலுவலா் முனியப்பசாமிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி பசும்பொன் சண்முகையா தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT