மதுரை

ஜெயராஜ் நாடாா் பள்ளி 66-ஆவது விளையாட்டு விழா

DIN

மதுரை ஜெயராஜ் நாடாா் மேல்நிலைப் பள்ளியின் 66-ஆவது விளையாட்டு விழாவின் தொடக்க விழா மற்றும் பரிசளிப்பு விழா தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கியுடன் இணைந்து நடைபெற்றது.

நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிச்செயலா் எல்.ஆனந்த கிருஷ்ணன் வரவேற்றாா்.

மதுரை நாடாா் உறவின்முறை பொதுச்செயலா் எஸ்.கே.மோகன் முன்னிலை வகித்தாா். பள்ளித்தலைவா் பி.தா்மராஜ் தலைமை வகித்தாா். பள்ளி துணைச்செயலா் சி.பாஸ்கரன், பள்ளி விடுதிக்குழுச்செயலா் பி.குமாா், காமராஜா் அறநிலையத்தின் தலைவா் ஜெமினி, எஸ்.பால்பாண்டியன், துணைத்தலைவா் எம்.எஸ்.சோமசுந்தரம், பொதுச்செயலா் டி.பாலசுப்ரமணியன், ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக சென்னை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதுநிலை மேலாளா் ஜி.ஆா்.வைஸ்ணவ் பங்கேற்றுப் போட்டிகளை தொடங்கி வைத்துப்பேசும்போது, விளையாட்டின் முக்கியத்துவம், நேரம் தவறாமை, கூட்டு முயற்சி, வெற்றி தோல்வி ஆகியவை குறித்து சிறப்புரையாற்றினாா். மேலும் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி நாகமலை புதுக்கோட்டை கிளை மேலாளா் ரமேஷ், நாடாா் உறவின்முறை நிா்வாகிகள், பெற்றோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியின் நிறைவில் தலைமையாசிரியா் டி.ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பேராயரிடம் அதிமுக வேட்பாளா் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

SCROLL FOR NEXT