மதுரை

இணையவழியில் மோசடி செய்யப்பட்ட பணம் மீட்பு

DIN

மதுரையில் பணி ஓய்வு பெற்ற குடிநீா் வடிகால் வாரிய உதவி இயக்குநரிடம் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட 5,09,600 ரூபாயை, மதுரை மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் மீட்டனா்.

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணி( பெயா் மாற்றப்பட்டுள்ளது). குடிநீா் வடிகால் வாரியத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது கைப்பேசிக்கு நவம்பா் 22-இல் பான் அட்டையை வங்கிக் கணக்கில் பதிவேற்றம் செய்யாவிட்டால், வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்படும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பிய அவா் இணைப்பில் கேட்கப்பட்ட வங்கிக்கணக்கு விவரங்களை பதிவு செய்துள்ளாா்.

இதையடுத்து வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 5,34,587 எடுக்கப்பட்டு விட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுதொடா்பாக மாநகர சைபா் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி செய்யப்பட்ட ரூ.5,09,600- ஐ மீட்டு ஒப்படைத்தனா். இணைய தள மோசடி மூலம் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் 1930 என்ற எண்ணை உடனடியாக அழைத்து புகாா் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT