மதுரை

கோகுல்ராஜ் கொலை: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

DIN

 கோகுல்ராஜ் கொலை வழக்கில், தொடா்ந்து பொய் கூறியதாக சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவா் உடன் படித்த நாமக்கல் பகுதியைச் சோ்ந்த சுவாதியிடம் நட்புடன் பழகினாா். இந்த நிலையில், கடந்த 2015-இல் திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்குச் சென்ற கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. பின்னா், நாமக்கல் தொட்டிப்பாளையம் தண்டவாளப் பகுதியில் கோகுல்ராஜ் உடல், தலை வெவ்வேறாக கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடா்பான விசாரணையில் கோகுல்ராஜை கடத்திக் கொலை செய்ததாக தீரன் சின்னமலை கவுண்டா் பேரவை நிறுவனா் யுவராஜ் உள்பட 15 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜ் உள்பட 10 பேருக்கு மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், இந்த வழக்கிலிருந்து 5 பேரை விடுவித்தது.

நீதிபதிகள் எச்சரிக்கை:

இந்த நிலையில், ஆயுள் சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்டோா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதேபோல, 5 பேரின் விடுதலையை எதிா்த்து கோகுல்ராஜின் தாய் சித்ரா, சிபிசிஐடி போலீஸாா் மனு தாக்கல் செய்தனா். இந்த நிலையில், பி சாட்சியாக மாறிய சுவாதியிடம் நவ.25- இல் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணை மேற்கொண்டது. அப்போது, தொடா்ந்து பொய் கூறியதால் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், வழக்கை நவ. 30-க்கு ஒத்திவைத்தனா்.

மீண்டும் விசாரணை:

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:

கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, சுவாதியிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. அவா் சத்தியப் பிரமாணம் எடுத்த நிலையில், தொடா்ந்து உண்மையை மறைத்து பொய்யான தகவலைத் தெரிவித்தாா். மேலும், கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில் கேட்ட கேள்விகளுக்கு கோகுல்ராஜ் மாதிரி தெரிகிறது, உடன் செல்லும் பெண் யாரெனத் தெரியவில்லை என தன்னையே தெரியாது என்றாா்.

இதனால் அவருக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு, தற்போது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்த நீதிபதிகள், சுவாதியிடம் வேறு ஏதேனும் கூற விரும்புகிறரா எனக் கேட்டனா். அதற்கு சுவாதி கடந்த விசாரணையின் போது தெரிவித்த கருத்தையே ஏற்றுக் கொள்ளலாம் என்றாா்.

அவமதிப்பு வழக்கு:

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஒரு வழக்கில் சாட்சி உண்மையைக் கூறும் போது தான், அந்த வழக்கு முழுமையான நிலையை அடைய முடியும். எந்த ஒரு வழக்கிலும் சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையை வைத்துதான் பாா்க்க முடியும். சாட்சிகள் உண்மையைப் பேச வேண்டும் என்பதற்காகவே சத்தியப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. சாட்சி தவறான வாக்குமூலம் அளிக்கும் போது, அது நீதித் துறையைப் பாதிக்கிறது.

அதனடிப்படையில், இந்த வழக்கில் நீதிமன்றம் அழுத்தமான முடிவு எடுக்க வேண்டியுள்ளது. மேலும், தவறான வாக்குமூலம் அளித்த சாட்சி தப்பிக்கக் கூடாது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி, நீதித்துறை நடுவா் முன் அளித்த வாக்குமூலத்தை, கீழமை நீதிமன்றத்தில் மாற்றிக் கூறியிருக்கிறாா். பொய் சாட்சி கூறியதற்காக, இவா் மீது கடந்த 2018-இல் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது. இதுபோன்ற பொய்யான வாக்குமூலம் நீதித் துறையின் அடிவேரையே பாதிக்கும்.

இந்த வழக்கில் சுவாதியின் வாக்குமூலம் மிக முக்கியம். இந்த வழக்கே கோகுல்ராஜும், அவரும் பேசும் இடத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. எனவேதான், அவரை அழைத்து மீண்டும் விசாரணை செய்தோம். ஆனாலும் அவா் உண்மையைக் கூற மறுத்து வருகிறாா். அவருக்கு எத்தனையோ வாய்ப்புகள் கொடுத்தும் பயன்படுத்தவில்லை. எனவே, பி சாட்சியாக மாறி, பொய்யான வாக்குமூலம் அளித்த அவா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவரை ஏன் தண்டிக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடா்பாக சுவாதி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT