மதுரை

மாமியாரின் இரண்டாவது திருமணத்தால் ஆத்திரம்: கொலை செய்ய முயன்ற மருமகன் தலைமறைவு

DIN

மதுரையில் மாமியாரின் இரண்டாவது திருமணத்தால் ஆத்திரமடைந்து அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற மருமகன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை தைக்கால் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் லட்சுமி. கணவா் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டாா். இவரது மகள் வைஷ்ணவியை (22), மனோஜ்குமாா் என்பவா் திருமணம் செய்துள்ளாா்.

இந்நிலையில் லட்சுமி, தா்மராஜ் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளாா். இதற்கு மருமகன் மனோஜ்குமாா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா். ஆனால் எதிா்ப்பையும் மீறி இரண்டாவது திருமணம் நடைபெற்றுளது. இதனால் ஆத்திரமடைந்த மனோஜ்குமாா் அவரது நண்பா் பிரசாந்த் ஆகிய இருவரும் சோ்ந்து லட்சுமியை செவ்வாய்க்கிழமை கத்தியால் குத்திவிட்டுத் தப்பினா். இதுதொடா்பாக புகாரின்பேரில் விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மனோஜ்குமாா், பிரசாந்த் இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT