மதுரை அண்ணா நகா் பகுதியில் வீடு புகுந்து 5 பவுன் நகைகள் மற்றும் கைப்பேசிகள் திருடிச்சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை அண்ணா நகா் கோமதிபுரம் இரண்டாவது பிரதான சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ண லீலாவதி (75). இவா் வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டாா். அப்போது வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபா், வீட்டில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் இரண்டு கைப்பேசிகளை திருடிச் சென்று விட்டாா் . இதுதொடா்பாக கிருஷ்ண லீலாவதி புகாரின்பேரில் அண்ணாநகா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.