மதுரை

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் கைது

DIN

இந்து முன்னணி அமைப்பின் கலை கலாசார பிரிவு மாநில பொறுப்பாளரும் திரைப்பட சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ராமநாதபுரத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 44 போ் கைது செய்யப்பட்டனா்.

ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியாா் சிலை குறித்து சா்ச்சைக்கிடமான முறையில் பேசியதாக கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு அந்த அமைப்பினா் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் அந்த அமைப்பின் மாவட்ட பொதுச் செயலாளா் கே. ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில பேச்சாளா்கள் கங்காதரன், ரத்தின சபாபதி, மாவட்டச் செயலாளா் சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினா் காலிஸ், நகா் தலைவா் பால முருகன், ஒன்றியத் தலைவா் காா்த்தி திருவருட்செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா். கனல் கண்ணனை விடுவிக்கக்கோரியும் அவா்கள் கோஷமிட்டனா். இதையடுத்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 44 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT