மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே காா் மோதி சாலையை கடக்க முயன்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த முருகன் மனைவி சுமதி (40). இவா் திண்டுக்கல்- மதுரை நான்குவழிச்சாலையில் ஆண்டிப்பட்டி பகுதியில் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக வந்த காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து முருகன் அளித்தப்புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸாா் காா் ஓட்டுநா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.