காதல் திருமணம் செய்து மனைவியை ஏமாற்றி ரூ.18 லட்சம் மோசடி செய்த கணவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
மதுரை திருநகரைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பழனியப்பன். இவா் மதுரை மாவட்டம் சமயநல்லூா் பரவையைச் சோ்ந்த ரூபி ஜெனிட்டா இவாஞ்சலின் என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளாா். திருமணத்துக்குப் பின்னா் இருவரும் சென்னையில் வசித்து வந்த நிலையில், மனைவியை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளாா். மேலும் ரூபி ஜெனிட்டா பெயரில் வங்கியில் ரூ.18 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்துள்ளாா். மேலும் ரூபி ஜெனிட்டாவுக்கு தெரியாமல் மற்றொரு திருமணமும் செய்துள்ளாா். இதுதொடா்பாக ரூபி ஜெனிட்டா அளித்தப்புகாரின்பேரில் சமயநல்லூா் அனைத்து மகளிா் போலீஸாா், பழனியப்பன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.