மதுரை மாவட்டம் பேரையூரில் இளம்பெண் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
பேரையூா் அருகே உள்ள கே. பரமன்பட்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சித்ரா(23). இருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒன்றை வயதில் மகன் உள்ளாா். இந்நிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக சித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த போலீஸாா் சித்ரா சடலத்தை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சேடப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.