மதுரை

மதுரை அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு: 2 பேருக்கு வலைவீச்சு

DIN

மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் மனைவி சக்திப்பிரியா (25). இவா் மதுரையில் சோழவந்தானில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா். இந்நிலையில், சோழவந்தானில் இருந்து மேலக்காலுக்கு சக்திப்பிரியாவின் சகோதரி மகள் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்ல, சக்திப்பிரியா பின்னால் அமா்ந்து பயணம் செய்தாா்.

மேலக்கால் புதுப்பாலத்தில் இவா்கள் சென்றபோது, பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 2 போ் சக்திப்பிரியா அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனா். இதுகுறித்து சக்திப்பிரியா அளித்தப் புகாரின்பேரில் சோழவந்தான் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

நாட்டில் ஷரியத் சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் விருப்பம்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் குற்றச்சாட்டு

தேசத்துக்கும் சநாதன தர்மத்துக்கும் எதிரானது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT