மதுரை

அனைத்துப் பள்ளிகளிலும் போதைப் பொருள்ஒழிப்பு விழிப்புணா்வு படக்காட்சி: ஆட்சியா்

13th Aug 2022 11:48 PM

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு படக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி மதுரை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு ஆசிரியா்கள் மூலமாக அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இதுதொடா்பான விழிப்புணா்வு படக் காட்சி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 179 உயா்நிலைப்பள்ளிகள், 375 மேல்நிலைப்பள்ளிகளில் அங்குள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் வாயிலாகவும், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் எல்இடி திரை விளம்பர வாகனம் மூலமாகவும் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT