மதுரையில் மதுபானக்கூடத்தில் மதுவுக்கு பணம் கேட்ட ஊழியரை அரிவாளால் வெட்டிய இருவரை திங்கள்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் விராதனூரைச் சோ்ந்தவா் வினோத்குமாா்(40). இவா் மதுரை அனுப்பானடி வீட்டு வசதி வாரியக்குடியிருப்பில் இயங்கி வரும் மதுபானக்கூடத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வினோத்குமாா் பணியில் இருந்தபோது, கண்மாய்க்கரை ராஜமான் பகுதியைச் சோ்ந்த மூா்த்தி(30), ஆசைமணி(24) ஆகிய இருவரும் மது அருந்த வந்துள்ளனா். இருவரும் மது அருந்திய நிலையில் ஊழியா் வினோத்குமாா் மதுபாட்டிலுக்கு பணம் கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தகராறில் ஈடுபட்டு வினோத்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனா். சம்பவம் குறித்து வினோத்குமாா் அளித்தப்புகாரின்பேரில் கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.