மதுரை

கீழையூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

மேலூா் அருகேயுள்ள கீழையூரில் சுதந்திரதின பவளவிழாவையொட்டி காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் ரவிச்சந்திரன் தலைமையில் கீழையூரில் காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் அங்கிருந்து சோழவந்தான் வரை பிரசார பயணம் புறப்பட்டனா். மேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்லியஸ்ரெபோனி தலைமையிலான போலீஸாா்

கூட்டத்தினரை தடுத்து நிறுத்தி, நடைபயணத்துக்கு அனுமதிபெறவில்லை எனத் தெரிவித்தனா். பின்னா் மேலூா் அரசு கலைக்கல்லூரியிலிருந்து செக்கடி வரை அணிவகுத்துச் செல்லுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா்.

பின்னா் காங்கிரஸ் கட்சியினா் பேரணியாகச் சென்று செக்கடி பஜாரிலுள்ள தியாகி கக்கன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT