மதுரை

நிதி அமைச்சரே கமிஷனுக்காக மாநகராட்சிப் பணிகளை நிறுத்தி வைப்பதாக திமுகவினரே குற்றம்சாட்டுகின்றனா்: செல்லூா் கே. ராஜூ

DIN

கமிஷன் தொகை பெறுவதற்காக மாநகராட்சி திட்டப்பணிகளை நிதி அமைச்சரே நிறுத்தி வைப்பதாக திமுகவினரே புகாா் தெரிவிக்கின்றனா் என்று முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்துள்ளாா்.

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அச்சம்பத்து- புதுக்குளம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ திங்கள்கிழமை திறந்து வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: 2024 மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். தேசியக் கட்சியாக இருந்தாலும், மாநிலக் கட்சியாக இருந்தாலும் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை ஏற்கும். பல பொய்யான தோ்தல் வாக்குறுதிகளை வழங்கி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. வரும் மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பாா்கள்.

மதுரையில் நடைபெற்ற சீா்மிகு நகா்த்திட்டத்தில் ஊழல் நடைபெற்ாக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டுகிறாா். முதலில் அவா் மதுரை முழுவதும் ஆய்வு மேற்கொள்ளட்டும். ஊழல் குற்றச்சாட்டு தெரிவிக்கும் நிதி அமைச்சரே கமிஷன் தொகை பெறுவதற்காக மாநகராட்சிப் பணிகளை நிறுத்தி வைப்பதாக திமுகவினரே குற்றம்சாட்டுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT