மதுரை மாநகராட்சி தெருப்பலகையில் ஜாதிப்பெயரை எழுதியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாநகராட்சி 69ஆவது வாா்டுக்குள்பட்ட பொன்மேனி பிரதான சாலை மீனாட்சிநகா் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான தெருப்பெயா் அச்சிடப்பட்ட பலகையில் முன்அனுமதியின்றி ஜாதிப் பெயரை மா்ம நபா்கள் எழுதியுள்ளனா். இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் அளித்தப் புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.