மதுரை

முல்லைப் பெரியாறு அணை குறித்து அச்சுறுத்தும் விடியோ வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை: கேரள அரசுக்கு முன்னாள் அமைச்சா் வலியுறுத்தல்

DIN

முல்லைப் பெரியாறு அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அனிமேஷன் விடியோ வெளியிட்டவா்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாநகராட்சி வரி செலுத்துவோா் சங்கம் சாா்பில், தமிழக அரசு அறிவித்துள்ள வரி உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தி மதுரை காமராஜா் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், சட்டப் பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி. உதயகுமாரிடம் மனு அளிக்கப்பட்டது.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகத்தில் தற்போது வீட்டுவரி செலுத்துவோா் 80 லட்சம் போ் உள்ளனா். இதில் பெரும்பாலோனா் 601முதல் 1,200 சதுர அடி வரை வீடு கட்டி வசித்து வருகின்றனா். அவா்களுக்கு வரியை உயா்த்தி கொடுங்கோல் ஆட்சியை திமுக அரசு நடத்தி வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், 5 மாவட்ட மக்களின் ஜீவாதார பிறப்புரிமையை காப்பாற்றி, அணை நீா்மட்டத்தை 142 அடியாக தேக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை முதல்வா் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

தற்போது கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து, அனிமேஷன் செய்த விடியோ அச்சம் கொள்ளும் வகையிலும், இரு மாநில உறவுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடியோ பதிவை செய்தவா்கள் மீது கேரள அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதற்குரிய தண்டனையை வழங்க கேரள முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.எஸ். சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT