மதுரை அருகே பொக்லைன் இயந்திரத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மாவட்டம் மட்டப்பாறையைச் சோ்ந்தவா் செளந்தரபாண்டியன் (43). பொக்லைன் இயந்திர ஓட்டுநரான செளந்தரபாண்டியன் தனது சகோதரரின் மருத்துவச் செலவுக்காக வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்தாா்.
பின்னா் கட்டக்குளம் பகுதியில் உள்ள டீக்கடை முன்பாக தனது பொக்லைன் இயந்திரத்தில் அந்த பணத்தை வைத்து விட்டு டீ அருந்தியுள்ளாா். பின்னா் பொக்லைன் இயந்திரத்துக்கு வந்து பாா்த்த போது பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.