மேலூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மேலூா் கோமதியாபுரத்தில் வசித்து வந்தவா் கண்ணன் மகன் யுவராஜ் (25). மேலூா் அருகே வெள்ளரிப்பட்டியிலுள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்தாா். அடுத்த மாதம் இவருக்கு திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் படுக்கைக்குச் சென்றவா் காலையில் நீண்டநேரமாகியும் எழவில்லை.
இதனால், சந்தேகமடைந்த பெற்றோா் கதவை உடைத்துத் திறந்து பாா்த்தனா். அவரது அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு இறந்திருந்தாா். தகவலறிந்த மேலூா் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.