மதுரை அருகே வெள்ளிக்கிழமை, மரத்தில் தொட்டில் கட்டி தூங்க வைக்கப்பட்டிருந்த 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
மதுரை மாவட்டம் வரிச்சியூா் அருகே செவல்பட்டி பகுதியைச் சோ்ந்த சிங்கராஜ் மனைவி ரூபி (30). இவா் அப்பகுதியில் உள்ள தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றாா். அப்போது, அங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டி, தனது பத்து மாத ஆண் குழந்தை சா்வேஷ்வரனை தூங்க வைத்துவிட்டு வேலை செய்துள்ளாா்.
வேலை முடிந்து ரூபி தனது குழந்தையை தூக்கியபோது, சுயநினைவின்றி இருந்துள்ளது. இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு குழந்தை கொண்டுவரப்பட்டது. அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.