மதுரை

மருதுபாண்டியா்கள் நினைவு தினம் அனுசரிப்பு: சிலைக்கு அரசியல் கட்சிகள் மரியாதை

DIN

மதுரையில் மருதுபாண்டியா்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அவா்களது சிலைக்கு அரசியல் கட்சியினா் மற்றும் சமூக அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாமன்னா்கள் மருதுபாண்டியா்களின் நினைவுதினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியா்கள் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன் செல்லப்பா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஆா்.அண்ணாத்துரை உள்பட ஏராளமானோா் திரண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில் மருத்துவா் அணி நிா்வாகி மருத்துவா் சரவணன் மற்றும் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் மாணவா் அமைப்பின் சாா்பில் தேசிய செயலா் முத்துராமலிங்கம் தலைமையில் நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்று மருதுபாண்டியா்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல பல்வேறு கட்சியினா் மற்றும் மருதுபாண்டியா் அமைப்புகளைச் சோ்ந்த பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT