மதுரை

மதுரையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ரெளடி கைது

DIN

மதுரையில் துப்பாக்கியை காட்டி வியாபாரிகளை மிரட்டிய ரெளடியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனா்.

மதுரை சம்மட்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சரத்குமாா் (30). இவா் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 8 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அரசரடி ஒத்தக்கடை பகுதியில் உள்ள சந்தையில் வியாபாரிகளிடம் சரத்குமாா் பணம் கேட்டு வியாழக்கிழமை இரவு மிரட்டியுள்ளாா். இதையடுத்து வியாபாரிகள் அவரைப் பிடிக்க முயன்றபோது தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியைக் காட்டி சுட்டு விடுவதாக பொதுமக்களை மிரட்டி அங்கிருந்து தப்பிச்சென்றாா். சம்பவம்தொடா்பாக தகவலின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சரத்குமாரைத் தேடி வந்தனா். இந்நிலையில் சம்மட்டிபுரம் பகுதியில் தலை மறைவாக இருந்த சரத்குமாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப்.1-இல் வாக்குச்சீட்டு விநியோகம் தொடக்கம் -புதுச்சேரி ஆட்சியா்

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT