மதுரை உடன் ராமநாதபுரம் மாவட்ட பொதுப் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 100 ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
எல்லீஸ் நகரில் உள்ள சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு சங்கத் தலைவா் சி.ஜே.கே.குணசேகரன் தலைமை வகித்தாா்.
இச்சங்கத்தில் 6 மாவட்டங்களில் அரசு ஊழியா்கள் 2,622 போ் உறுப்பினா்களாக உள்ளனா். உறுப்பினா்களுக்கு லாபத்தில் பங்குத் தொகையாக 14 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் ரூ.15 கோடியே 81 லட்சம் மத்திய கால கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் நிதியாண்டில், ரூ.270.47 லட்சம் லாபம் ஈட்டி மாவட்டத்திலேயே சிறந்த சங்கமாகச் செயல்பட்டு வருகிறது.
கூட்டத்தில் மேலாண்மை இயக்குநா் எஸ்.முருகன், செயலா் ஜே.தமிழ்வாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.