கள்ளழகா் திருக்கோயில் நிா்வாகத்துக்குள்பட்ட சோலைமலை முருகன் கோயிலில் பக்தா்கள் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.15 லட்சம் இருந்தது.
சோலைமலை முருகன் கோயில் உண்டியல்கள் நிா்வாக அதிகாரி தி.அனிதா, இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையா் மு.ராமசாமி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. கோயில் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். அவற்றில் ரொக்கம் ரூ.14 லட்சத்து 82 ஆயிரத்து 901-ம், தங்கம் 80 கிராம், வெள்ளி 360 கிராமும் இருந்தது.