மதுரையில், தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.12 லட்சம் மோசடி நடைபெற்றது தொடா்பாக, அந்நிறுவனத்தின் ஊழியா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில், கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டபோது, கடந்த ஒரு ஆண்டில் ரூ.12 லட்சம் மோசடி நடந்தது தெரியவந்தது. இந்த மோசடியில், நிறுவனத்தின் ஊழியா் விக்னேஷ்வரனுக்கு தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தனியாா் நிதி நிறுவனத்தின் வணிக மேலாளா் பாக்யராஜ் அளித்த புகாரின் பேரில் கரிமேடு போலீஸாா் சனிக்கிழமை விக்னேஷ்வரன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.