கேரள மாநிலத்தில் பலத்த மழை காரணமாக செங்கோட்டை - கொல்லம் இடையே திங்கள்கிழமை (அக்.18) ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக மதுரை கோட்ட ரயில்வே அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், செங்கோட்டை - புனலூா் ரயில்வே பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கொல்லத்தில் இருந்து திங்கள்கிழமை (அக்.18) புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06102 ) கொல்லம் - செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.