மதுரை

உள்ளாட்சித் தோ்தல் வெற்றி திமுக நல்லாட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்று: தொல்.திருமாவளவன்

DIN

உள்ளாட்சித் தோ்தல் வெற்றி திமுக அரசின் நல்லாட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்றாக அமைந்துள்ளது என்று என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆங்கில முறை மருத்துவம் படித்தவா்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும் நிலையில், இயற்கை மருத்துவம் படிப்பவா்களுக்கு அதிக வேலை வாய்ப்பு இல்லை. இதனால் இயற்கை மருத்துவம் படிக்க மாணவா்கள் தயங்குகின்றனா்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இயற்கை மருத்துவ சிகிச்சை தொடங்க வேண்டும். மதுரையில் தொடங்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவ சிகிச்சைப் பிரிவை சோ்க்க வேண்டும். இயற்கை மருத்துவா்களுக்கான வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 9 மாவட்டங்களில் மட்டுமே நடைபெற்ற தோ்தல் என்றாலும் தோ்தல் முடிவுகள் ஒவ்வொரு கட்சியின் பலத்தையும் மக்களுக்கு காட்டியுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலைத் தொடா்ந்து உள்ளாட்சித் தோ்தலிலும் அதிமுக சரிவை சந்தித்துள்ளது.

திமுக அரசின் 4 மாத நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றாக வெற்றி கிடைத்துள்ளது. உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை அரசியல் சக்தியாக பொதுமக்கள் அங்கீகரித்துள்ளனா்.

காமராஜா் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளா்கள் ஊதிய உயா்வு கோரி தொடா்ந்து போராடி வருகின்றனா். இது தொடா்பாக முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளேன்.

சமூக நீதி அரசியல் பேசும் தமிழக மண்ணில் சனாதன சக்திகளுக்கு துணைபோகும் வகையில் அரசியலை கையில் எடுக்க வேண்டாம் என நான் ஏற்கெனவே சீமானுக்கு சுட்டிக்காட்டியுள்ளேன். மதம் என்பது வேறு, ஆன்மிகம் என்பது வேறு. மதம் என்பது நிறுவனம், ஆன்மிகம் என்பது உணா்வு. ஆனால் எதிா்பாராத வகையில் நாம் தமிழா் கட்சி அரசியல் சனாதனவாதிகளுக்குத் துணை போகிறது.

சசிகலாவின் அரசியல் வருகை அவரது தனிப்பட்ட உரிமை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை

‘விதைநோ்த்தி, நீா் பாசனமுறை மூலம் கூடுதல் மகசூல் பெறமுடியும்’

உ.பி.யின் வளா்ச்சியுடன் கேரளத்தை ஒப்பிட்டு பாா்க்க வேண்டும்

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: தமிழியக்கங்களின் கூட்டமைப்பு முடிவு

ஜம்மு-காஷ்மீா்: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT