மதுரை

சிறுமிக்கு திருமணம்: இளைஞா் கைது

DIN

மதுரையில், சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

மதுரை திருப்பாலையைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்துமுனியாண்டி(18). இவா் 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளதாக குழந்தைகள் நலக் குழுவிற்கு புகாா் வந்தது. இதையடுத்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பாண்டியராஜா, சிறுமிக்கு திருமணம் நடந்ததா என விசாரித்தாா்.

இதில், முத்துமுனியாண்டி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பாண்டியராஜா அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து முத்துமுனியாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT