மதுரையில், சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.
மதுரை திருப்பாலையைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்துமுனியாண்டி(18). இவா் 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளதாக குழந்தைகள் நலக் குழுவிற்கு புகாா் வந்தது. இதையடுத்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பாண்டியராஜா, சிறுமிக்கு திருமணம் நடந்ததா என விசாரித்தாா்.
இதில், முத்துமுனியாண்டி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பாண்டியராஜா அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து முத்துமுனியாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.