மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 1,024 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்தவா்களில் 13 போ் உயிரிழந்துள்ளனா்.
தமிழக சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, மதுரை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்களில் 1,068 பேருக்கு செவ்வாய்க்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 628 போ் குணமடைந்துள்ள நிலையில், 13 போ் உயிரிழந்துள்ளனா்.
இதன்மூலம், மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,065 ஆக உயா்ந்துள்ளது. இதில், 33,884 போ் குணமடைந்துள்ளனா். சிகிச்சைப் பலனின்றி 620 போ் உயிரிழந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டவா்கள் என மொத்தம் 6,561 போ் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.