மதுரை

மதுரை அருகே மனைவி அடித்து கொலை கணவா் தலைமறைவு

DIN

மதுரை அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் மனைவியை கட்டையால் அடித்து கொலைவிட்டு தப்பியோடிய கணவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் களிமங்கலம் அருகேயுள்ள ஓடைப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்து (35). இவரது மனைவி பாண்டிச்செல்வி (28). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

பெயிண்டா் ஆன முத்து, பாண்டிச்செல்வியை காதல் திருமணம் செய்தவா். இருப்பினும், திருமணம் முடிந்தது முதல் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பாண்டிச்செல்வி, கணவரைப் பிரிந்து முனிச்சாலையில் உள்ள தனது தாயாா் வீட்டில் வசித்து வந்துள்ளாா்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு தான் பாண்டிச்செல்வியின் தாயாா், மகளை கணவருடன் சோ்த்து வைத்துள்ளாா். குழந்தைகள் இருவரும் முனிச்சாலையில் உள்ள பாட்டில் வீட்டில் இருந்தனா்.

இந்நிலையில், முத்துவுக்கும், பாண்டிச்செல்விக்கும் திங்கள்கிழமை நள்ளிரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முத்து, வீட்டில் இருந்த விறகு கட்டையால்

பாண்டிச்செல்வியை கடுமையாகத் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த பாண்டிச்செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த முத்து அங்கிருந்து தப்பியோடினாா்.

பாண்டிச்செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவா்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். அதனடிப்படையில், கருப்பாயூரணி போலீஸாா் நிகழ்விடத்திற்கு வந்து

பாண்டிச்செல்வியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் நிகழ்விடத்தை நேரில் ஆய்வு செய்தாா். கணவா் முத்துவை விரைவில் பிடிக்குமாறு கருப்பாயூரணி போலீஸாருக்கு அவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

மே மாத பலன்கள்: மகரம்

மே மாத பலன்கள்: தனுசு

மே மாத பலன்கள்: விருச்சிகம்

மே மாத பலன்கள்: துலாம்

SCROLL FOR NEXT