மதுரை

பைக் மீது லாரி மோதல்: விவசாயி பலி

DIN

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (55). இவருக்குச் சொந்தமான தோட்டம் வலைசேரிப்பட்டி அருகே உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளாா். அப்போது, சிவகங்கை மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலத்திலிருந்து திருப்பூருக்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில், கொட்டாம்பட்டி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் ஆறுமுகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT